Tuesday 7 August 2012

பரமாத்மா-2




அட! எப்ப பார்த்தாலும் காதலன்தான் காதலியை துறத்தி துறத்தி காதலிக்கனுமா, ஒரு ச்சேஞ்சுக்கு ஒரு காதலி தன் காதலனை உருகி உருகி காதலித்தால் எப்படி இருக்கும். இப்படி இருக்கும்............................

       என்னுள்ளே நீயே
       என்னுடனே நீயே
       என்னை சுற்றியும் நீயே
       நான் எல்லாம் நீயே


       என் உதட்டின் மேலே நீயே
       என் முதுகு தண்டும் நீயே
       என் இதையத்தின் மேலே நீயே
       உடல் முழுவதும் நீயே


       என் கன்னத்தில் நீயே
       மலர் மொட்டு போல நீயே
       தூக்கத்திலும் நீயே விடியலும் நீயே
       ஒவ்வொரு நிமிடமும் நீயே


       என் வயதை வதைக்கும் வெதுவெதுப்பு நீயே
       என் மனதை தாலாட்டும் குளிர்ச்சியும் நீயே
       வெளியே நான் பாரமாக நினைக்கும் வெகுளிதனம் நீயே
       வெளியே நான் பாட நினைக்கும் கிறுக்குத்தனமும் நீயே


       என் ஒவ்வொரு யுத்தம் நீயே
       என் காவலனும் நீயே
       என் பிரியமான எதிரி நீயே
       மிதமான முள்ளால் கிள்ளிய முதல் மழை துளி நீயே


       என் வெட்கத்தை ஒளிந்துக்க அரவணைப்பும் நீயே
       என்னுள் எல்லாம் களவாட உரிமையும் நீயே
       வெளிகாட்ட முடியாத குற்றமும் நீயே
       என்னை உன் தோளோடு தாங்கி நடக்கும் நட்பும் நீயே


       தீறாத தாகம் நீயே என் மோஹம் நீயே
       தவிர்க்க முடியாத சிநேகமும் நீயே நீயே
       இனிப்பான காயம் செய்யும் அநியாயம் நீயே
       ஆனாலும் இஷ்டம் நீயே நீயே

       மெய் மறக்க வைத்தல் நீயே
       மாயமூட்டுதலும் நீயே
       நான் வேண்டும் என் மறு ஜென்மம் நீயே

          
       கை பிசைத்துக் கொள்ளல் நீயே
       சீண்டுதலும் நீயே
       எனக்கே தெரியாத என் புது பெயர் நீயே


       என் அழகு நீயே ஆனந்தம் நீயே
       என் பந்தம் நீயே
       என் சொந்தம் நீயே
       என் அந்தம் நீயே

       நீயே      நீயே      நீயே      நீயே
       நீயே      நீயே      நீயே...........

No comments:

Post a Comment