காதுக்குட் பேசு உன் சுவையான குரலிலே
களவாடி கொடு பூ முத்தம் ஒன்றையே
இயற்க்கை தந்த சலுகையில் மனம் துள்ளுகிறது
சொல்லிவிடு எல்லை மீறென்று
நான் வேண்டுகிறேன், சொல்லி விடாதே
'சும்மா இரு' என்று.
என் முன்னே நீ பாடாமல்
பதுக்கி கொண்ட உன்னத சங்கீதம்
தப்புதப்பாய் பாடுது உன் இதைய தாளம்!
என்னோடே என்கூடவே எல்லாம்
மெல்ல மெல்ல கடந்து செல்கையிலே, ஏன்
மறைத்தாய் உன் மனதாழம்!
எவ்வளவு நேரம்தான் காத்திருக்க
பூ மொட்டிர்க்கும் வாய் பேச்சு வருமென்று
கனவின் ஆழ்தடத்தில் மனம் இறங்குகிறது
சொல்லி விடாதே 'சும்மா இரு' என்று.
நூற்றி எட்டு ஆசைகளையும்
கோடி கோடி வண்ணங்களையும், கனவின்
ஆடையாக தொடுத்து!
கண்ணும் கண்ணும் சேரும்போதும்
மௌனமே பேச்சாகும் போதும், எல்லாவற்றையும்
சொல்லியே ஆக வேண்டும் பிரித்து!
கரு விழியிலே ஒப்புக்கொள் அப்பிக்கொள்ளவே!
பேரழகியே உன் விருப்பத்திற்காகவே
மனம் ஏங்குதடி
சொல்லி விடாதே "ச்சீ சும்மா இரு டா" என்று.
No comments:
Post a Comment